எந்நாளும் போற்றுவோம்! மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்களின் பிறப்பிற்கான அர்த்தத்தை உலகிற்கு நிரூபித்து செல்ல வேண்டும். தனது பிறப்பிற்கான அர்த்தத்தை அவ்விதம் நிலை நாட்டியவர்தான் நமது பெருந்தலைவர் காமராஜர். காமராஜர் முதலமைச்சராக ஆனவுடனே நாட்டு மக்களின் கல்வியில்தான் அக்கறை செலுத்தினார். உணவு இல்லாததால் மாணவர்கள் கல்வி கெட்டுப் போகக் கூடாது என்று சிந்தித்த பெருந்தலைவர் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார். எழுத்தறிவின்மையைப் போக்க 11ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியைக் கொண்டுவந்தார். அனைத்துப் பள்ளி குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார். இது போன்ற மேலும் பற்பல சாதனைகளுக்கும் சொந்தக்காரர்தான் பெருந்தலைவர் காமராஜர். அவரின் சிறப்புகளை நாம் எந்நாளும் போற்றுவோம்!.
Posts
Showing posts from July 12, 2014